குழந்தைகள் என்றாலே எல்லோருக்கும் ஒரு வித சந்தோஷம் ஏற்படும். அவர்களோடு ஒன்றாக இணைந்து உலவும் போது நம்முடைய கஷ்டம் எல்லாம் மறந்து விடும். நாமும் குழந்தையாகவே இருந்து இருக்கலாமோ என்ற எண்ணம் கூட தோன்றும்.ஆனால் நாம் குழந்தை வளர்ப்பிற்கான சில குறிப்புகளை மனதில் கொள்ள வேண்டும். ஏனென்றால் குழந்தைகள் நம் செய்கைகளை அப்படியே பின்பற்றுவார்கள். அதனால் நாம் நல்லவற்றையே கற்பித்து மேன்மையான வழியில் குழந்தைகளை வளர்ப்போம். குழந்தை வளர்ப்பில் நாம் கவனம் கொள்ள வேண்டியே விஷயங்கள் சில...
- அதிகக் கண்டிப்பு,அதிக செல்லம் எதிர்மறை விளைவுகளை உண்டாக்கும்.
- படிப்பில் அவர்களுக்கு ஆர்வத்தை உண்டாக்க வேண்டும்.
- அவர்களின் கருத்துகளுக்கு மதிப்பளிக்க வேண்டும்.
- அவர்களின் தனித்திறமையை கண்டறிந்து ஊக்குவிக்க வேண்டும்.
- குழந்தைகள் புறப்படும் நேரத்தையும், வீடு திரும்பும் நேரத்தையும் கவனிக்க வேண்டும்.
- பெரியவர்களிடம் மரியாதையுடன் நடக்கப் பழக்க வேண்டும்.
- சிறியவர்களிடம் அன்புடன் நடக்கப் பழக்க வேண்டும்.
- குழந்தைகளின் நட்பு வட்டத்தை அறிந்து கொள்ள வேண்டும்.
- அவர்களிடம் இறை உணர்வை உண்டாக்க வேண்டும்.
- நமது சொந்த விருப்புகளையும், இலட்சியங்களையும் அவர்கள் மேல் திணித்தல் கூடாது.
- பிற குழந்தைகளுடன் ஒப்பிட்டுப் பேசக்கூடாது.
- மற்றவர் முன் இழிவுபடுத்தக் கூடாது.
- பணத்தின் அருமையை,அவசியத்தை உணர்த்த வேண்டும்.
- குழந்தைகளை குறுக்கு விசாரணை செய்யவோ, சந்தேகப் படவோ கூடாது
- அவர்கள் விருப்பப்படி நடக்க அனுமதிக்க வேண்டும்.அந்த வழி சரியானதா என்பதை மட்டும் அறிந்து கொள்ள வேண்டும்.
Thumbnail image : Photo by cottonbro from Pexels
Thank you

No comments:
Post a Comment